7.12.10

தொடர்ந்து பெய்து வரும் மழை

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மக்கள் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். சென்னை ஏரிகளுக்கு நடுவில் இருப்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது. வானம் பார்த்த பூமிகளிலயும் நல்ல மழை.

பள்ளிகளுக்கு விடுமுறை - பல பாலங்கள் உடைந்து தண்ணீர் சாலையில் பெருக்கெடுக்கிறது.

மழை - இயற்கையின் கொடை - வரும் போது மழையைச் சேமித்து வைக்கும் பழக்கம் நமக்கு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.
இருந்த குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் என அனைத்தும் நாம் வாசம் செய்யும் வீடுகளாகி விட்டன...

காடுகளை அழித்து அங்கே விலங்குகள் வாழ விடாமல் செய்தோம். பிறகு - விலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன என்று கூப்பாடு போடுகிறோம்...
தண்ணீர் இருக்கும் தாழ்வான பகுதிகளில், குளங்கள், ஏரிகளில் வீடுகள் கட்டிக் கொண்டு இப்போது வீடுகளுக்குள் தண்ணீர் - வெள்ளம் என்று வேதனைப் படுகிறோம்.

ஒன்று மட்டும் நிச்சயம் - இன்னும் சில மாதங்களில் நாம் தண்ணீர் பஞ்சம் - தண்ணீர் பற்றாக் குறை என்று நாம் அலைவோம் -
அதையும் இதே நாளிதழ்கள் வெளியிடும் -
அப்போது மழை பகவானே எங்களுக்கு மழையைக் கொடு என்று சாமியை முற்றுகை இடுவோம்...